இலங்கை உதவி ஆசிரியர் வேலை வாய்ப்பு 2025
ஆரம்ப சிறுவர்பராய அபிவிருத்தி உதவி பெண் ஆலோசகர் (உதவி ஆசீரியர்) / பகல்நேர கண்காணிப்பு நிலைய பெண் பராமரிப்பாளர் பதவிக்கு சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்
குண்டசாலை, புதிய நகரம், இல. 2A முகவரியில் அமைந்துள்ள மத்திய மாகாண ஆரம்ப சிறுவர்பராய அபிவிருத்தி அலகு அலுவலக வளாகத்தில் 2024ம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டு நடத்திச் செல்லப்படும் மாதிரி ஆரம்ப சிறுவர்பராய அபிவிருத்தி நிலையத்திற்கு மேற்படி பதவிக்காக ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்வதற்கு கீழ்க்காணும் அடிப்படைத் தகைமைகள் உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தகைமைகள் :
- விண்ணப்பதாரி இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதிக்கு கிட்டிய 05 வருடங்கள் தொடர்ந்து மத்திய மாகாணத்திற்குள் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதிக்கு 18 வயதிற்கு குறையாமலும் 40 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
- க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் மூன்று திறமைச் சித்திகளுடன் முதலாம் மொழி மற்றும் கணிதம் உட்பட குறைந்தபட்சம் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் ஆரம்ப சிறுவர்பராய அபிவிருத்தி பற்றியஒரு வருடத்திற்கு குறையாத டிப்ளோமா பாடநெறியொன்றை அல்லது இலங்கைத்திறந்த பல்கலைக் கழகத்தினால் வழங்கப்படும் ஒரு வருட சான்றிதழ் பத்திரபாடநெறியை அல்லது இரண்டு வருட உயர் சான்றிதழ் பத்திர பாடநெறியைப்பயின்று இருத்தல் வேண்டும்.
- ஆரம்ப சிறுவர்பராய அபிவிருத்தி நிலையத்தில் பகல் நேர கண்காணிப்பு நிலையபராமரிப்பாளராக ஒரு வருடத்திற்கு குறையாத அனுபவம் இருத்தல் வேண்டும்.
- ஆரம்ப சிறுவர்பராய அபிவிருத்தி நிலையமொன்றில் பெண் ஆலோசகர்(முன்பள்ளி ஆசிரியர்) ஆக கடமையாற்றியுள்ள அனுபவம் விசேட தகைமையாகக்கொள்ளப்படும்.
- இதற்காக விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பம் மற்றும் ஏனைய தகவல்களை எமது இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் அல்லது இல. 2A நகரம் குண்டசாலை முகவரியில் அமைந்துள்ள மாகாண ஆரம்ப சிறுவர்பராயஅபிவிருத்தி அலகிற்கு வருகைதந்து பெற்றுக்கொள்ள முடிவதுடன் விண்ணப்பங்கள்ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதி 2025.01.15 ஆகும்.